ஆன்மிகம்
பத்ரகாளியம்மன்

மேலகிருஷ்ணன் புதூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

Published On 2020-07-27 07:22 GMT   |   Update On 2020-07-27 07:22 GMT
மேலகிருஷ்ணன்புதூர் பள்ளம் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவில் விஸ்வரூப தரிசனம், பூஜை, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், 7 வகையான உணவு பதார்த்தங்கள் படைத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.
மேலகிருஷ்ணன்புதூர் பள்ளம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிபூரம், வளையல் திருவிழா நடந்தது. விழாவில் விஸ்வரூப தரிசனம், பூஜை, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு மலர் அலங்காரம், வளையல் மாலை அணிவித்து பூஜை, தொடர்ந்து ஆடிபூரக்கூழ், 7 வகையான உணவு பதார்த்தங்கள் படைத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மேலகிருஷ்ணன்புதூர் பராசக்தி பஜனைக்குழு அனந்தகிருஷ்ணன், ஊர் செயலாளர் ராஜாசிங் மற்றும் பலர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News