ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு

Published On 2019-08-14 08:16 GMT   |   Update On 2019-08-14 08:16 GMT
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை திறக்கப்படுகிறது. 21-ந் தேதி வரை நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக கடந்த 6-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 7-ந் தேதி நிறைபுத்தரிசி பூஜை ஐயப்பன் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து நடைபெறும் தீபாராதனைக்கு பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்றைய சிறப்பு பூஜைகள் நடைபெறாது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மறுநாள் 17-ந் தேதி வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 21-ந் தேதி வரை 5 நாட்கள் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். 21-ந்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கேரளாவில் பிரசிதிப்பெற்ற ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவம்பர் மாதம் 9-ந்தேதி திறக்கப்படும். தொடர்ந்து 13-ந்தேதி வரை ஓணம் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
Tags:    

Similar News