ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5-ந் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவில் இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சிவாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியமும், ஜானகி பாலசந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசையும், பொம்மலாட்டமும், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலையில், மாலையிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு தேருக்கு சாரம் கட்டும் பணி, தேரில் தேரோட்டி, குதிரை வாகனங்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.
5-ந் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவில் இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சிவாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியமும், ஜானகி பாலசந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசையும், பொம்மலாட்டமும், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலையில், மாலையிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு தேருக்கு சாரம் கட்டும் பணி, தேரில் தேரோட்டி, குதிரை வாகனங்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.