ஆன்மிகம்
அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றம், மாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு அன்னதானம், இரவு கலை நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
இதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு கலைநிகழ்ச்சிகளும், அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 8-ந்தேதி காலை 8 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், பிற்பகல் முத்தாரம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் வக்கீல் மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளர் ராஜலிங்க பெருமாள், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு கலைநிகழ்ச்சிகளும், அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், 8-ந்தேதி காலை 8 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல், பிற்பகல் முத்தாரம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் வக்கீல் மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், பொருளாளர் ராஜலிங்க பெருமாள், கணக்கர் ராஜசேகர் ஆகியோர் செய்துள்ளனர்.