ஆன்மிகம்
சிதம்பரத்தில் சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
சிதம்பரம் சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளினார்.
சிதம்பரம் சபாநாயகர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். இதையடுத்து மேள, தாளம் முழங்க சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளினார். இதையடுத்து மேள, தாளம் முழங்க சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.