ஆன்மிகம்

திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அம்மன்

Published On 2019-02-26 06:19 GMT   |   Update On 2019-02-26 06:19 GMT
நத்தம் மாரியம்மன் கோவில் கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார்.
நத்தம் மாரியம்மன் கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சிறிய அளவிலான இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ராஜகோபுரங்களோ, தங்க விமானங்களோ கிடையாது. கருவறையின் முன்பாக சிறிய அளவில் ஒரு மண்டபம் மட்டும் உள்ளது.

இந்த மண்டபமும் ஓடுகளால் வேயப்பட்டது ஆகும். கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார். உற்சவரான அம்பாள் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அம்மன் கோவில் என்பதால் கருவறைக்கு கிழக்கு பகுதியில் விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடது புறத்தில் நவக்கிரக நாயகர்களுக்கான சன்னதியும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நித்தமும் அருள்புரியும் அம்மனாக நத்தம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.
Tags:    

Similar News