ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது

Published On 2019-02-15 08:30 GMT   |   Update On 2019-02-15 08:30 GMT
அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய திருத்தலமான நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான அப்பர் பெருமான் தெப்ப திருவிழா வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
முன்னொரு காலத்தில் சைவ மதத்துக்கும், சமண மதத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினர், சைவசமய குறவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியை பரிசோதிக்கும் பொருட்டு, அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான், “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே” என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது.

அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாறுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய திருத்தலமான இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான அப்பர் பெருமான் தெப்ப திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

அன்று இரவு 7 மணி அளவில் அம்மன் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News