ஆன்மிகம்

நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2018-10-30 04:12 GMT   |   Update On 2018-10-30 04:12 GMT
கேரளா மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
கேரள மாநிலம் ஹரிப்பாடு, மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஐப்பசி மாத ஆயில்ய திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு இந்த விழா மன்னரும், குடும்பத்தினரும் பங்கேற்கும் விழாவாக விளங்கியது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலில் ‘உருளி கவிழ்த்தல்‘ வழிபாடு நடத்தினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இங்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடத்தினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்பு வாழ்ந்த இந்த கோவிலில் இந்த ஆண்டு ஆயில்ய விழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா, மகா தீப காட்சிகள், மோகினியாட்டம் போன்றவை நடைபெறும்.

நாளை (புதன்கிழமை) நாகராஜாவிற்கும், சர்ப்பயக்‌ஷியம்மாவுக்கும் திருவாபரணம் சார்த்தி நிவேத்யம் நடத்தப்படும். விழா இறுதி நாளான நாளை மறுநாள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில், சங்கீத கச்சேரி, திருவாதிரைக்களி போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News