search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகராஜா கோவில்"

    • 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நாகராஜா கோவிலும் ஒன்று. தமிழகத்தில் நாகதோஷ பரிகார தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருப்பது இங்கு மட்டும் தான். இதனாலேயே வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்கி றார்கள். இப்படி சிறப்பு மிகுந்த நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து தேரை ஏராளாமான ஆண்களும், பெண்களும் வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தில் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் ஹரே கிருஷ்ணா...ஹரே கிருஷ்ணா என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது 4 ரத வீதியையும் சுற்றி நிலைக்கு வந்து சேர்ந்தது.

    ஆடி அசைந்து வந்த தேரை ஏராளமான மக்கள் வீடுகளின் மாடியில் நின்றும், ரத வீதிகளின் இருபுறமும் நின்றும் பார்த்து சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    தேரோட்டத்தை யொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர் நிலைக்கு வந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.
    • தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி நாகராஜன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு வழிபாடும், மக்கள் இசையும் நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், சுவாமி பத்மேந்திரா, நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ரோ சிட்டா திருமால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7.20 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. இதில் சுவாமி பத்மேந்திரா கலந்து கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இதைத் தொடர்ந்து புஷ்ப விமானத்தில் சாமி எழுந்த ருளல் நிகழ்ச்சியும் நடக்கி றது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை வாகன பவனியும், சமய சொற்பொழிவும், சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனையும் நடக்கிறது.

    9-ம் திருவிழா நாளான 26-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கச்சேரியும், 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 27-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும், மாலை 5.30 மணிக்கு ஆராட்டும் நடக்கி றது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சாமி திருக்கோவி லுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.

    • ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும்.
    • கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தைத்திருவிழா நடைபெறும். அதன்படி வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான கால்நாட்டு விழா நேற்று காலையில் கோவிலில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் நம்பூதிரி கேசவன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால் நாட்டப்பட்டது. இதில் கண்காணிப்பாளர் ஆனந்த் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.
    • உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் குமரி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகராஜரை தரிசித்து சென்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் உள்ள 11 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.

    குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தங்கம் முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள், சுய உதவி குழு பெண்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    • பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்
    • இன்று ஆவணி 3-வது ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாக தோஷங் கள் நீங்கும், திருமணங்கள் கைக்கூடும் என்பது ஐதீகம்.

    இதனால் ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆவணி ஞாயிற்றுழமைகளில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி செல்கிறார்கள்.

    ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமை இன்று காலை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டது. இதையடுத்து நாகராஜருக்கு சிறப்பு தீபா ராதனையும், அபிஷே கங்களும் நடந்தது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. நாகராஜரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

    இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. பக்தர்க ளுக்கு நாகராஜா கோவில் கலையரங்கத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து கோவில் நடை சாத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி யதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகராஜா திடலில் தங்களது இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் விட்டு விட்டு கோவிலுக்கு நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலை ஓரங்களில் திரு விழாக்கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது. கோவிலில் கூட்டம் அலைமோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.
    • கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகதோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக நாகர்கோவில் நாகராஜா கோவில் விளங்குகிறது. இங்கு பக்தர்கள் தோஷங்கள் நீங்கவும் திருமணங்கள் கைகூடவும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

    நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணங்கள் கைகூடும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு தோறும் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த ஆண்டு ஆவணி மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முதல் ஆவணி ஞாயிற்றுக்கிழமையான இன்று (20-ந் தேதி) காலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட் டது. இதை தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனையும் அபிஷேகமும் நடந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சாமி தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

    பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் இன்று பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர். கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில் கூட்டம் அலை மோதியதையடுத்து இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கோவில் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. நாகராஜா கோவில் மைதானத்தில் பக்தர்கள் இருசக்கர வாகனங்களையும் 4 சக்கர வாகனங்களையும் நிறுத்தி சென்று இருந்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு வசதியாக பால் மற்றும் மஞ்சள் பொடிகள் கோவில் வாசலிலும் நாகராஜா திடல் பகுதியில் உள்ள சாலை ஒரங்களிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக கோவில் நடை 12 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்படலாம். சாமி தரிசனத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கோவில் அலுவலகத்தில் இருந்து போலீசார் கண்காணித்தனர்.

    • ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பணிகள் நடைபெறுகிறது
    • கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாகராஜா வுக்கு என தனி சன்னதி நாகர்கோவிலில் உள்ளது. இந்த கோவில் நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாக விளங்கு கிறது.

    இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். சர்ப்ப தோஷ பரிகாரம், கால சர்ப்ப தோஷ பரிகாரம், ராகு-கேது பரிகாரம், தொழில் காரியம், திருமண காரியம், குழந்தை பாக்கியம் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடலாம்.ஜாதகப்படி கல்நாகர் பிரதிஷ்டை செய்ய விரும்பும் பக்தர்கள், இத்திருத்தலத்தில் உள்ள நாகர் பீடத்தில் ஒற்றைக்கல் நாகரை பிரதிஷ்டை செய்யலாம்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    ஒவ்வொரு கோவிலுக்கும் குறிப்பிட்ட சிறப்பு நாட்கள் இருக்கும். அப்படி, நாகராஜா 'ஆயில்யம்' நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், ஒவ்வொரு மாதமும் ஆயில்ய நட்சத்திரத்தன்று வந்து பகவானை வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு. முக்கியமாக, ஆவணி மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் மிகச்சிறப்பு.

    பல ஆண்டுகளுக்கு முன்பு வேணாட்டை ஆண்ட பூதளவீர ஸ்ரீவீரஉதயமார்த்தாண்டவர்மா என்ற களகாட்டை தலைநகராக கொண்ட மன்னர் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த கோவில் பற்றி கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு வந்து வழிபட்டார். இதனால் அவர் பூரண குணம் அடைந்தார். இதனால் இந்த ஆலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. இதையடுத்து மன்னர் ஆவணிமாத ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜைகளை நடத்தி காணிக்கைகளை செலுத்தினார் என கோவிலில் உள்ள கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி 1 மைல் தூரத்திற்கு பாம்பு கடித்து யாரும் இறந்ததாக சான்று கள் இல்லை என கூறப்படுகிறது.

    நாகராஜா கோவிலில் குறிப்பாக ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் வந்து நாகராஜரை வழிபட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு மாதம் 20-ந்தேதியும், 2-வது ஞாயிற்றுக் கிழமை 27-ந்தேதி, 3-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3-ந்தேதியும், 4-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ந்தேதியும், 5-வது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17-ந்தேதியும் வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு சுவாமி வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற் பாடு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

    கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்தர்கள் ஒரு வழியாக சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மறுபாதை வழியாக வெளியே வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அபிஷேக அர்ச்சனை டிக்கெட் வழங்கப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கு பிரசாதமாக சில்வர் பாத்திரத்தில் பால் பாயாசம் மற்றும் தேங்காய் பழம் வழங்கப்படுகிறது.

    தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5 ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவிலில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
    • நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

    நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் காலை முதல் மாலை வரை கோவிலுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள்.

    அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தனர்.

    பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு
    • பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில், ஜூன்.11-

    நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை எனில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். காலையில் இருந்து மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள்.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவ்வாறு வந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் அரச மரத்தை சுற்றி அமைந்துள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபாடு செய்தார் கள். பின்னர் அங்கு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை தரிசனம் செய்துவிட்டு மூலவரான நாகராஜரை வழிபட்டனர். மேலும் பல பக்தர்கள் நாகராஜருக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை அபிஷேகத்துக்காக கொடுத்து தரிசனம் செய்தனர்.

    மேலும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பெரும்பாலான பெற்றோர் பள்ளி செல்லும் தங்களது குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மாணவ-மாணவிகளும் கோவிலுக்கு வந்து நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டி சாமி கும்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாகராஜா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராகவீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற் றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற் பொழிவு, பரத நாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தி னம் நடந்தது. குமரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடிநின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபி ஷேகம் மற்றும் சிறப்பு வழி பாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்த ருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது.

    தமிழகத்தில் நாகதோஷ பரிகார ஸ்தலங்களில் நாகரே மூலவராக வீற்றிருக்கும் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் தை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வாகன பவனி, சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாமா மற்றும் ருக்மணியுடன் அனந்த கிருஷ்ணர் தேரில் எழுந்தருளிய காட்சியை ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் இருபுறமும் கூடி நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடந்தது. மாலையில் நாகராஜா கோவில் தெப்பகுளத்தில் சாமிக்கு ஆராட்டு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆராட்டு முடிந்ததும் சாமி ஒழுகினசேரி ஆராட்டு துறைக்கு எழுந்தருளினார். பின்னர் அங்கு அலங்காரம் முடித்து கோவிலுக்கு சாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.

    ஆராட்டுத்துறையில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளிய சாமியை வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்துடன் 10 நாட்கள் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

    • ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    • நாளை ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாக தோஷம் தீர்க்கும் புண்ணிய ஸ்தலங்களில் நாகராஜா கோவிலும் ஒன்றாகும். இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நாகர் சிலைகளுக்கு பாலூற்றி வழிபட்டு வருகிறார்கள். நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைமாதம் 10-நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை மாலை நேரங்களில் வாகன பவனி சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு ஆன்மீக சொற்பொழிவு பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    இதைத் தொடர்ந்து சுவாமி அனந்த கிருஷ்ணன், பாமா, ருக்மணியுடன் தேரில் எழுந்தருளினார்கள்.இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், இணை ஆணையர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்து வரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தேர் திருநிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தையொட்டி கோவிலில் அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறும். 10-ம் திருவிழாவான நாளை 6-ந் தேதி காலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5 மணிக்கு நாகராஜா கோவில் திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×