search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவில் தை திருவிழாவில் 5-ந் தேதி தேரோட்டம்
    X

    நாகராஜர் கோவில் 

    நாகராஜா கோவில் தை திருவிழாவில் 5-ந் தேதி தேரோட்டம்

    • விழா ஏற்பாடுகள் தீவிரம்
    • தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று, தை திருவிழா.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா, கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    புஷ்பக விமானம், சிங்க வாகனம், கமல வாகனம், ஆதிசேஷ வாகனம், யானை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. மேலும் மாலை முதல் இரவு வரை கோவில் வளாகத்தில் சமய சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடை பெற உள்ளது. காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு தேர் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    5-ந்தேதி இரவு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் சிறப்பு செண்டை மேளத்துடன் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக் கிறது. மறுநாள் (6-ந்தேதி சிறப்பு அபிஷேக ஆராத னைகள் மற்றும் சிந்தனை சொல்ல ரங்கம் போன்றவை நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சுவாமி கோவிலுக்கு எழுந்தருளல் வைபவத்துடன் விழா நிறைவுக்கு வருகிறது.

    Next Story
    ×