ஆன்மிகம்

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு ரத்தின அங்கி அலங்காரம்

Published On 2018-09-26 03:10 GMT   |   Update On 2018-09-26 03:10 GMT
தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.
தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்து உள்ள மாரியம்மன் கோவிலில் தெப்ப மகோற்சவ விழாவையொட்டி நேற்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். 
Tags:    

Similar News