ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 29-ந்தேதி நடக்கிறது

Published On 2018-04-27 08:15 GMT   |   Update On 2018-04-27 08:15 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மாலய பூஜையும், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, பந்திரடி பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.

பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், 7.30 மணிக்கு அம்மனுக்கு பலவண்ண மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். பின்னர் அம்மனை பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், வெள்ளி சிம்மாசனத்தில் வைத்து அம்மனுக்கு தாலாட்டும், அத்தாழ பூஜையும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் மேலாளர் சிவராமசந்திரன், தலைமை கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News