search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்"

    • பானக்காரம் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
    • பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்த கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

    இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்' என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாக படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருப்பதற்காக பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்' நிவேத்தியமாக படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்' ஆகும். இந்த பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது.

    இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்கு பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்த பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.
    • `கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.

    மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

    எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது.
    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த கோவிலில் தினமும் அதிகாலை 6 மணி, காலை 11.30 மணி, மாலை 6.30 மணி மற்றும் இரவு 8 மணி ஆகிய 4 நேரங்களில் அலங்கார தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இந்த தீபாரதனையின்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடல்களை பாடுவது வழக்கம். மேலும் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின்போது 10 நாட்களும் இரவு 8.30 மணிக்கு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி பவனி வரும்போது 3-வது சுற்றின் இறுதியில் அம்மன் எழுந்தருளி இருக்கும் வாகனத்தின் முன்னால் ஓதுவார்கள் தேவாரம் பாடல்களை பாடியபடி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஓதுவாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணிய ஓதுவார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இதனால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக்கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்தது.

    அதேபோல புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின்போது 10 நாட்களும் வாகனத்தின் முன்னால் அம்மனுக்கு தேவாரப் பாடல் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது. அதற்குப் பதிலாக வெளியில் இருந்து வரும் பக்தர்களே அபிராமி அந்தாதி மற்றும் தேவாரப் பாடல்களை பாடி வந்தனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.

    எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையின் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று புதிதாக ஒரு ஓதுவாரை நியமிக்க நடவடிக்கை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவு திருமலை சிவா உய்ய கொண்டான் கோவிலில் கடந்த 10 ஆண்டுளாக ஓதுவராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு இப்போதுதான் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவன் கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்களை போல் இந்தப் பெண் ஓதுவாரும் நெற்றியில் திருநீர் பட்டை அணிந்து குங்குமம் திலகமிட்டு கழுத்தில் ருத்ராட்சக்கொட்டை மாலை அணிந்து பக்தி பரவசத்துடன் காட்சி அளிக்கிறார்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் தீபாராதனை நேரங்களில் இவர் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல்களை பாடுவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்து உள்ளது.

    • விடிய-விடிய 4 கால பூஜைகள் நடக்கிறது
    • ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்வ ருகிற18-ந்தேதிமகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று நள்ளிரவு கோவில் நடை திறக்கப்பட்டு 4கால பூஜை க ள்விடிய-விடிய நடக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதி காலை4.30மணி முதல் இரவு 8.30 மணி வரை வழக்கம்போல் உள்ள அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்ப டுகிறது. அதன் பிறகு மகா சிவராத்திரி விழாவை யொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடக்கிறது.

    பின்னர் 12.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜையும் 1.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜையின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    மீண்டும் மறுநாள் அதிகாலை 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் உள்ள பூஜைகள் நடக்கிறது. மகா சிவராத்திரியை யொட்டி ஒவ்வொரு கால பூஜையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண் காணிப்பாளரும் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • மேயர் மகேஷ் பக்தர்களுக்கு நெற்கதிர் பிரசாதமாக வழங்கினார்
    • அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை மாதங்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை நிறைபுத்தரிசி பூஜை இன்றுஅதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடந்தது.

    இதையொட்டி இன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த நிகழ்ச்சிநடந்தது.பின்னர் பகவதி அம்மன்கோவிலில் மூலஸ்தானமண்டபத்தில் நெற்கதிர் கட்டுகளை வைத்து கோவில் மேல் சாந்தி சீனிவாசன் போற்றி பூஜைகள் நடத்தினார். அதன் பின்னர் பகவதி அம்மன் முன்பு நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர்அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட் டது.

    இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெற்க திர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.

    நிறை புத்தரிசி பூஜை வழி பாட்டுடன் கோவி லில் விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, பந்திரடி பூஜை, உச்சிகால பூஜை, உச்சிகால தீபாராதனை போன்றவை நடந்தது.மாலையில் சாயரட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்லக்கில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை ஆகியவை நடக்கிறது. நிறை புத்தரிசி பூஜையை யொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம் வைரக் கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்க தலைவர் பால்சாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • நடிகர் யோகி பாபு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கி திணறினார்.
    • அவரது மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நடிகர் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அவர்அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வந்து அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் நடிகர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    நடிகர் யோகிபாபு சாமி கும்பிட வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது. இதனால் அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர்.

    இதனால் நடிகர் யோகி பாபு ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தியில் சிக்கி திணறினார். உடனே அவருடன் வந்த அவரது மெய்க்காப்பாளர்கள் ரசிகர்களிடம் இருந்து அவரை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர்.

    • கொலு மண்டபத்தில் வருகிற 6-ந் தேதி நடக்கிறது
    • அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத் திரத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவாதிரையை யொட்டி ஊஞ்சல் உற்சவம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டிஅன்று அதிகாலை 4-30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு தீபாராதனையும் 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜையும் அதைத்தொடர்ந்து 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி தங்க கவசம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜையும் உச்சிகால அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாரா தனை, 6.45 மணிக்கு அம்மனுக்கு கொலு மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதையொட்டி உற்சவ அம்பாளை பல வண்ண மலர்களால் அலங்கரித்து கோவில் மூலஸ்தானத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவில் மேல்சாந்திகள் கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து உற்சவ அம்பாளை கொலு மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளச் செய்கிறார்கள்.ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர் பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், தீபாராதனை ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த தாலாட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்திகள் நடத்து கிறார்கள். பின்னர் இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம்வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக் கிறது. பின் னர் அத்தாள பூஜையும் ஏகாந்த தீபாராதனை யும் நடக்கிறது.

    இந்த ஊஞ்சல் உற்சவத்தை தரிசிக்க திரளான பக்தர் கள் திரள்வார்கள். இதற்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் மற்றும் மண்ட கப்படி கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.

    • தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
    • நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்ளுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் காணிக்கையாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 334 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் ஒரு மாதம் ஆன பிறகும் இதுவரை திறந்து எண்ணப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு வந்தபோது நடந்தது
    • செல்போனில் வைரலாக பரவும் காட்சியால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அன்று முதல் தினமும் காலை 9 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகத்துக் குரிய புனித நீர் விவேகா னந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து எடுத்து வரப்படுகிறது.

    புனித நீர் வெள்ளிக்கு டத்தில் எடுக்கப்பட்டு நெற்றிப் பட்டம்அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதேபோல இரவு 9 மணிக்கு நடக்கும் பகவதி அம்மனின் வாகன பவனிக்கும் இந்த யானை பயன்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவ ராத்திரி திருவிழாவுக்காக கொண்டுவரப்பட்ட யானை, இரவு நேரத்தில் கன்னியாகுமரி பார்க்வியூ பஜாரில் உள்ள கடைவீதி வழியாக கோவிலுக்கு அழைத்து வரப்படும் போது 50 அடி உயரத்தில் இருந்து குறுகிய படிக்கட்டு வழியாக பாகனால் இறக் கப்படும் காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைர லாக பரவி கொண்டி ருக்கிறது.

    இந்த திகில் காட்சி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது
    • மாலைமலர் செய்தி எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெற்று வரு கின்றன.

    இந்த விழா காலங்களில் 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக புனித நீர், விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில்இருந்து வெள்ளிக்குடத்தில்எடுத்துநெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த வைகாசி விசாக திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்பட வில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    வைகாசி விசாக விழா வின் 10 -ம் நாள் நடந்த தேரோட்டத்தின் போது தேர் தடி எடுத்து போடு வதற்கு கூட யானை பயன்படுத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மன வேத னைைய ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவிலாவது யானையை பங்கேற்க செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றிய செய்தி மாலைமலரில் சமீபத்தில் வெளியானது.

    இதன் எதிரொலியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொ ண்டது. இதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவுக்கு யானை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

    நெல்லையில் இருந்து யானை வரவழைக்கப்பட்ட உள்ளது. இதற்காக வனத்து றையினரிடமும் அனுமதி பெறப்பட்டு உள்ளது.

    • தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம்
    • தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.

    இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப் பட்டு வருகிறது.

    இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர்ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் தர்மேந்திரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரமேஷ், கணக்காளர் ஸ்ரீ ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.60 ஆயித்து 95 வசூல் ஆகி இருந்தது.

    அதேசமயம் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஆடி களப பூஜை நாளை தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
    • பூஜைக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கும் தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு செல்கிறார்கள். அங்குதங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர்மட தந்தூரி சங்கர நாராயணரூ நடத்துகிறார்.

    பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல மறுநாளான 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. இந்த களப பூஜை நிறைவடைந்த பிறகு மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×