search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரா பவுர்ணமி"

    • தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
    • காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

     60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

     புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.

    மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.

    இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார்.
    • அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார்.

    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

    பின்னர் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.

    வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின்னர் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன்நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

    • சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.

    இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.
    • இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

    பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது.

    மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது.

    அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.

    சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும்.

    இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும்.

    நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும்.

    பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.

    இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

    இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது.

    இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோவில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது.

    கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.

    மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும்

    பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் அடைக்கலம் புரிந்தார்.

    ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது.

    இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.

    • குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.
    • வேறு பல நினைவுகளுடன் வலம் வரக்கூடாது.

    நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும்.

    ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். ஏனென்றால் வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது.

    பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும்.

    மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. ஏனென்றால் அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கம் உள்ளது என்பார்கள்.

    குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது.

    கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது.

    பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.

    வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது.

    காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது.

    குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது.

    போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது.

    புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது.

    தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது.

    யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.

    கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது.

    கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும்.

    திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை அணிந்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு.

    திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது.

    பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். (காசு கொடுத்தல் கூடாது)

    வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது.

    அடிக்கு ஆயிரத்தெட்டு லிங்கங்கள், அடித்துகள் பட்ட இடம் எல்லாம் கோடாணு கோடி லிங்கங்கள் (அ) வாகனத்தால் வலம் வரக்கூடாது. (ஆ) காலணி அணிந்து வலம் வரக்கூடாது. (இ) புகை பிடித்தல் கூடாது. (ஈ) திருவண்ணாமலையில் ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் கூடாது.

    கார்த்திகை தீபத்தன்று நெய் பிரார்த்தனை உள்ளவர்கள் மட்டுமே கிரிமீது ஏறி பிரார்த்தனை செலுத்தலாம்.

    கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம்.

    மலையை ஒட்டிய பாதையைத் தவிர்த்து இடது புறமாக செல்ல வேண்டும்.

    எறும்பு, வண்டு, ஈ போன்ற சிறு உயிரினங்கள் எதிர்ப்பட்டால் கூட அதற்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லுதல் நலம்.

    8 லிங்கங்கள்

    திருவண்ணாமலையின் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. அஷ்டதிக்கு பாலகர்கள் எனப்படுவோர் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வாயு, வருணன், குபேரன், ஈசானன் ஆகியோர் ஆவர்.

    வடக்கு திசையின் அதிபதி குபேரன்.

    வடக்கு திசையின் அதிபதி ஈசானன்.

    வடமேற்கு திசையின் அதிபதி வாயு.

    மேற்கு திசையின் அதிபதி வருணன்

    கிழக்கு திசையின் அதிபதி இந்திரன்.

    தெற்கு திசையின் அதிபதி எமன்

    தென்மேற்கு திசையில் அதிபதி நிருதியை

    தென்கிழக்கு திசையின் அதிபதி அக்னி.

    இந்த அஷ்டதிக் பாலகர்கள் வணங்கிய எட்டு லிங்கங்களும் இவர்கள் பெயராலேயே எட்டுத் திசைகளில் மலையைச் சுற்றி அமைந்துள்ளன.

    சூரியனே வலம் வந்து வணங்குகின்ற மூர்த்தி அருணாசலம் ஒன்றுதான்.

    திருவண்ணாமலையில் உருவமாகவும், அருவமாகவும், உருஅருவமாகவும் பல கோடி சித்தர்கள், மகான்கள், யோகிகள், முனிகள், ரிஷிகள் பல அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகைள் வடிவமாகவும், கற்பாறைகளாகவும் பார்க்கின்றவர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கின்றனர்.

    • சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள்.
    • புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம். வியாழன் - ஞானம் கூடும்.

    சந்திர பகவானை மாத்ருகாரன் (தாயை நிர்ணயிப்பவர்) என்பார்கள். சந்திரனுக்குரிய அதிதேவதையாக பார்வதியை சொல்கிறார்கள். எனவே சித்ரா பவுர்ணமி தினம், தாயாரை இழந்தவர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளாக கூறப்படுகிறது.

    தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்குரிய வழிபாடுகளை செய்வதைப்போல தாயை இழந்தவர்கள் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தர்ப்பணம் கொடுத்து விரதம் இருந்து வழிபாடுகளை செய்ய வேண்டும். எவன் ஒருவன் பெற்ற தாயை நினைத்து, அவள் பாசத்தை நினைத்து மனதாரப் போற்றி நாளை வழிபாடு செய்கிறானோ, நிச்சயமாக அவன் குலம் எவ்வித குறையுமின்றி தழைக்கும்.

    சித்ரகுப்தரை கும்பிடுங்கள்

    நாம் செய்யும் பாவ, புண்ணியங்களை இம்மி பிசகாமல் கணக்கு எழுதுபவர் சித்ரகுப்தர். இவர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று தான் அவதரித்தார். இவரது திருமணமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சித்ரகுப்தரை நாளை நாம் மனப்பூர்வமாக வழிபடுவது நல்லது. நாளை யார் அவரை வழிபடுகிறார்களோ, அவர்களது பாவ சுமை ஏறாமல் சித்ரகுப்தர் பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கையாகும்.

    நாளை திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள், மறக்காமல் ஆலயத்துக்குள் இருக்கும் சித்ரகுப்தரை வழிபடலாம். அப்போது, `நான் மலை அளவு செய்த பாவத்தை கடுகு அளவுக்கும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலை அளவுக்கும் கணக்கில் எழுதிக் கொள்' என்று கூறி வழிபட வேண்டும்.

    திருமணம் கை கூடும்

    பவுர்ணமி பூஜை பெண்களுக்கு அதிக பலன்களைத் தரக்கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள், திருமணம் கை கூடவும் பவுர்ணமி பூஜை செய்யலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று அம்மனுக்கு பூப்போட்ட பட்டாடை சார்த்தி வழிபடுவது நல்லது. மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் கொடுத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    பலன்கள்

    ஒவ்வொரு கிழமையும் வலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

    ஞாயிறு - உடல் பிணி போகும். சிவகதி கிடைக்கும்

    திங்கள் - நிறைய ஆற்றல் கிடைக்கும்.

    செவ்வாய் - வறுமை நீங்கும், பிறவிப் பிணி நீங்கும்.

    புதன் - எல்லா வித்தைகளிலும் மேம்பாடு அடையலாம்.

    வியாழன் - ஞானம் கூடும்.

    வெள்ளி - விஷ்ணு பதம் பெறலாம்.

    சனி - நவக்கிரகங்கள் கொடுக்கும் நற்பலன் அடைவார்கள்.

    நம்முடைய பாவங்கள் தொலைய ஒரே வழி கிரிவலம்தான்.

    • சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது.
    • மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார்.

    மாதந்தோறும் பவுர்ணமி தினம் வந்தாலும், சித்திரை மாதம் வரும் `சித்ரா பவுர்ணமி' தினத்துக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளது.

    சித்திரை மாதம் பவுர்ணமி திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் இந்த தினத்தை `சித்ரா பவுர்ணமி' என்று அழைக்கிறார்கள். மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் அன்று ஒன்றாகி இருக்கும்.

    அது மட்டுமின்றி சூரியபகவான் உச்சம் பெற்ற மேஷ ராசியில் இந்த பவுர்ணமி தினம் வரும். இதுவும் சித்ரா பவுர்ணமி தினத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    அம்மன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள், திருவிளக்கு பூஜை, பால்குடங்கள் எடுப்பது மற்றும் சித்திரை கஞ்சி தயாரிக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பது போன்றவற்றில் கலந்து கொள்ளலாம்.

    சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள், வீதி ஊர்வலங்கள் நடைபெறும். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார். அது போல காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாளை பிரம்மன் வழிபடுவார்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அதில் திருவண்ணாமலையில் நடைபெறும் `சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது. அது ஏன் என்பதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரது வாழ்விலும் அமாவாசை, பவுர்ணமி இரண்டு திதிகளும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி படைத்தவை.

    சூரியனுடன் 0 டிகிரியில் சந்திரன் இணைவது அமாவாசை ஆகிறது. பிறகு சந்திரன் தினமும் 12 டிகிரி வீதம் நகர்ந்து 15-வது நாளில் 180 டிகிரியில் சூரியனுக்கு சம சப்தமாகும் போது பவுர்ணமி ஆகிறது.

    பவுர்ணமியில் சந்திரன் முழுமையான ஆகர்ஷண சக்தியைப் பெற்று அருள் ஆற்றலை வெளிப்படுத்துவார். அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் கூடுதல் பலன்களைத் தரும்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்திரன் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகர்ஷ்ண சக்தியை வெளிப்படுத்துவார். அதாவது ஆண்டுக்கு ஒரு தடவையே இந்நாளில் சந்திரனிடம் இருந்து பல மடங்கு அளவுக்கு ஈர்ப்பு- சக்தி வெளிப்படும்.

    சந்திரன் வழங்கும் அந்த சக்தியை நாம் பெற வேண்டும். சந்திர ஒளி நம் உடல் மீது பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே சங்க காலத்தில் இருந்த நம் மூதாதையர்கள் சித்ரா பவுர்ணமியை மிக, மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

    வீடுகளில் யாரும் முடங்கிக் கிடக்கக்கூடாது. அன்றிரவு வெளியில் வந்து சந்திரன் தரும் சக்தியை பெற வேண்டும் என்று ஆலயங்களில் விதம், விதமாக விழாக்களை உருவாக்கினார்கள். இந்த அடிப்படையில் தான் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் மரபு உண்டானது.

    இந்த உண்மையை தெரிந்து கொண்டதால் தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். நாளை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் எந்த மாதம், எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஏற்கனவே நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்னர். ` சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?' என்று பலரும் யோசிக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வது என்றால், `நம் ஆத்ம பலம் அதிகரிக்கும்' என்ற மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்கும் `ஆத்ம பலம்' என்பது மிக, மிக முக்கியமானது. ஒருவரிடம் ஆத்ம பலம் பெருகினால் தான் அவர் இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

    ஆத்ம பலம் அதிகரித்தால் கடவுளைத் தேடும் ஞானமும், அறிவாற்றலும் அதிகரிக்கும். இதற்கு பின்னணியில் சூரியனும், சந்திரனும் உள்ளனர்.

    பித்ருகாரரான சூரியனும், மாத்ருகாரரான சந்திரனும் சிவசக்தியின் ஐக்கியமாக போற்றப்படுகிறார்கள். பிராணாயமம், யோகா போன்றவற்றில் சிறப்பு பெற சூரியனின் அனுக்கிரகமும், ஆத்ம பலம் மேம்பட சந்திரனின் அனுக்கிரகமும் அவசியம் தேவை.

    ஆத்ம பலம் மேம்பட்டால், மனம் வசப்படும். மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டால் வாழ்க்கை தடம் மாறி விடும். மனம் கட்டுப்பட, கட்டுப்பட நாம் யார், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பக்குவம் உண்டாகும்.

    பிறவிப் பெருங்கடலில் நீந்தி கரையேற வேண்டும் என்ற தாக்கத்தை இது தான் கொடுக்கும். முக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும்.

    இந்த பக்குவத்தை நாம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது பெற முடியும். இந்த பக்குவம் பெருக, பெருக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.

    பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தூய்மையான, நிம்மதியான வாழ்வை நாம் வாழ முடியும். தூய்மையும், நிம்மதியும் ஒருவருக்கு இருந்து விட்டால், அவர் எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும்.

    ஒரு மனிதனுக்கு இந்த பிறவியில் இதை விட வேறு என்ன வேண்டும். எனவே எல்லாம் தரும் ஆத்ம பலத்தைப் பெற சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோம். சிறப்பான வாழ்வை உறுதி செய்வோம்.

    • வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம்.
    • மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    சித்திரை மாதம் :- புதுவை மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை குடும்பத்தார் 1909-ம் ஆண்டு முதல் தமிழ் வருடப்பிறப்பன்று காலை முதல் அபிஷேக ஆராதனை செய்து வருகின்றனர். வருடப்பிறப்பு வீதி உற்சவம், சித்ரா பவுர்ணமி வீதி உற்சவம், கும்பாபிஷேக ஆண்டு விழா, சங்காபிஷேகம் வீதி உற்சவம், சுக்ல சதுர்த்தி அன்று ஆலயத்தினுள் உற்சவம்.

    வைகாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம். (அன்று ஏழைகளுக்கு அன்னமளித்தல்)

    ஆனி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம். ஆனித்திருமஞ்சனம், நர்த்தன கணபதி அபிஷேகம், ஆலய உற்சவம்.

    ஆடி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், ஆடி அமாவாசை அன்று காலை கடல் தீர்த்த வாரி, வீதி உற்சவம்.

    ஆவணி மாதம்:- விநாயக சதுர்த்தி அன்று இரவு வெள்ளி மூஷிக வாகன வீதி உற்சவம், பிரம்ம உற்சவம், பவுர்ணமியை அனுசரித்துக் கொடியேற்றம்.

    புரட்டாசி மாதம்:- சதுர்த்தியை அனுசரித்துப் பவித்ர உற்சவம் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். ஆறாவது நாள் வீதி உற்சவம்.

    ஐப்பசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்க ளில் உற்சவம், பவுணர்மியை அனுசரித்த அன்னாபிஷேகம், கந்தசஷ்டி உற்சவம் 9 நாட்கள்.

    கார்த்திகை மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் தீப உற்சவம்.

    மார்கழி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். ஆருத்ரா தரிசனம்.

    தை மாதம்:- முதல் தேதி சங்கராந்தி உற்சவம், மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம், தை அமாவாசை நாளில் காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரி வீதி உற்சவம், தைப்பூச உற்சவம்.

    மாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். மாசி மகம் அன்று காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரியும், மாலையில் திருவீதி உலாவும், சிவராத்திரி நான்கு காலம் பூசை மறுநாள் வீதியுலா.

    பங்குனி மாதம்:- மாத சுக்ல பூர்த்தியில் தமன உற்சவம், பங்குனி உத்திர உற்சவம்.

    ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி காலை 10 மணியளவில் அபிஷேக ஆராதனையும், மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    • அபிஷேக பிரியை முண்டகக்கண்ணி அம்மன்.
    • ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும்.

    `மலைத்தேன் எடுத்து வந்து மாரிக்கு அபிஷேகம்

    தென்னை இளநீராலே தேவிக்கு அபிஷேகம்

    மாம்பழச் சாறாலே மாரிக்கு அபிஷேகம்

    மஞ்சள் நீரெடுத்து மகமாயிக்கு அபிஷேகம்'

    என்ற நாட்டு பாடலுக்கு ஏற்ப, அபிஷேக பிரியையான அன்னை முண்டகக் கண்ணிக்கு தினசரி காலை 6.30 மணியில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை அபிஷேகங்கள் பக்தர்களால் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதற்காக இந்த அபிஷேகங்களை தினசரி நடத்துகிறார்கள். சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சையென பக்தர்கள் செய்யும் அபிஷேகங்களால் அன்னை குளிர்ச்சியாய் இருப்பாள். செய்யும் அபிஷேகங்களுக்கு ஏற்ப அன்னை பின்வரும் பலன்களை தருவாள்.

    சந்தனக்காப்பு-செல்வம் அளிக்கும்

    மஞ்சள் காப்பு - வசீகரணம் உண்டாக்கும்

    பால் - ஆயுளை வளர்க்கும்

    தயிர் - மக்கட்பேறு அளிக்கும்

    பஞ்சாமிர்தம் - வெற்றியைத் தரும்

    தேன் - சுகமளிக்கும்

    இளநீர் - போகமளிக்கும்

    எலுமிச்சை - எம பயத்தைப் போக்கும்

    இங்கு வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகுவோர் அம்மைநோய் முதலான எல்லாவகை நோய்களில் இருந்தும் நிவர்த்தியாகி நன்மை பெறலாம்.

    பொங்கலிடுதல்

    வீட்டில் நடக்கும் சுபகாரியங்களுக்கு முன்னோடியாகவும் வேண்டுதல் நிறைவேறியதற்காகவும் இந்த கோவிலில் பொங்கலிடுவது வழக்கம். ஆடி, தை வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்போர் கூட்டம் அதிகம். இங்குள்ள பொங்கல் மண்டபத்தில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் பொங்கலிடுதல் நடைபெறும்.

    நித்ய பூஜை

    இத்திருக்கோவிலில் தற்போது நாள்தோறும் காலை, நண்பகல் இருவேளைகளிலும் பூசாரிகளால் ஆராதனை நடத்தப்படுகிறது. காலை சந்தி - காலை 7.00 மணி, உச்சிக்காலம் - பகல் 12.00 மணி

    திருக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். விழா நாட்களில் திருக்கோவில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாட்டிற்கு திறந்திருக்கும்.

    ஆடிப்பூரம்

    ஆடி மாதம் முழுவதும் அன்னைக்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் மழை ஆரம்பித்து ஐப்பசி வரையிலும் தொடரும். பருவ நிலையால் ஏற்படும் நோய் நொடியிலிருந்தும், இயற்கை சேதங்களிலிருந்தும் காக்கும்படி அன்னையை ஆடி மாதத்தில் வேண்டி வழிபடுவர்.

    ஆடித்திங்களில் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அன்னையின் கோவிலை மொய்த்திருக்கும். அன்னையை வலம் வருவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, வேப்பஞ்சேலை அணிந்து வலம் வருவது, கூழ் ஊற்றுவது, பொங்கலிடுதல், அபிஷேகம் செய்தல் முதலான பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்கள் முழுவதும் கோவில் விழாக்கோலம் பூண்டிக்கும்.

    இத்திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அம்பிகை பிரபஞ்சத்தை சிருஷ்டிப்பதற்காக திரு அவதாரம் செய்த திருநாளே ஆடிப்பூரமாகும். ஆடிப்பூரம் உற்சவம் செய்வதால் ஊருக்கு நன்மையும், மழையும், நல்ல மகசூலும் அன்னை வழங்குவாள் என்பது நம்பிக்கை.

    நவராத்திரி

    நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவு என்பது பொருள். புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களில் அன்னை பராசக்தியைப் பல வடிவாகப் பூசித்து விழா நடத்துவது நவராத்திரி விழாவாகும். பத்தாம் நாளை விஜயதசமி விழாவாக கொண்டாடுகிறோம்.

    பராசக்திக்கு ஏற்பட்ட பெருவிழாவே நவராத்திரியாகும். முதல் மூன்று நாட்கள் வெற்றியை நல்கும் மலைமகளுக்கும், அதன்பின்னர் மூன்று நாட்கள் செல்வத்தைக் கொடுக்கும் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கல்வியைக் கொடுக்கும் கலைமகளுக்கும், பத்தாம் நாளன்று எல்லாக் கலைகளுக்கும் தலைவியாம் சகலகலாவல்லிக்கும் விழாவெடுப்பதே நவராத்திரி விழாவாகும்.

    நவராத்திரி விழாவின்போது, இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் அன்னை முண்டகக் கண்ணி பார்வதி, கவுரி, சரஸ்வதி, பத்மாசினி, மீனாட்சி, மகேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, சிவபூஜா கம்பாநதி, கஜலட்சுமி தோற்றங்களில் எழுந்தருளி காட்சி தருவாள்.

    நவராத்திரியில், தினசரி பகல் 12 மணிக்கு அபிஷேகம், மாலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், ஆபரண அலங்காரமும், தூப தீப தீப ஆராதனையும் நடைபெறும்.

    பத்தாம் நாள் விஜயதசமியன்று இரவு, அன்னை முண்டகக் கண்ணி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருவாள். சிறப்பு மேள வாத்தியத்துடன், ஓதுவாமூர்த்தி குழுவினரின் தேவார இன்னிசையுடனும் வீதியுலா நடைபெறும்.

    நவராத்திரி விழாவின்போது தினசரி இரவில் முன்னணிப் பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். நவராத்திரி கடைசி மூன்று தினங்களில் லட்சார்ச்சனை நடைபெறும்.

    சித்ரா பவுர்ணமி பால்குட விழா

    சித்திரை மாதம் கடும்கோடை காலம், அன்னையோ குளிர்ச்சியுடையவள்; எப்போதும் குளிர்ச்சியை நாடுபவள், தன்னை சூழ்ந்த பக்த கோடிகளுக்கு அம்மை நோய் வராமல் காப்பவள்.

    அன்னைக்கு 1986-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட விழா எடுத்து பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி அன்று பால்குட விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 1992-ம் ஆண்டில் சித்ரா பவுர்ணமி அன்று 508 பால்குட விழாவாக நடைபெற்றது. அது அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தப்படி உள்ளது.

    சித்ரா பவுர்ணமி அன்று காலை 8 மணியளவில் ஆண்களும் பெண்களுமாக பக்த கோடிகள் பால்குடம் சுமந்து கோவில் இருந்து புறப்பட்டு அம்மன் வீதியுலா செல்லும் மாடவீதி வழியாக வலம் வந்து கோவில் வந்தடைந்து அன்னைக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும்.

    அன்றிரவு சிறப்பு மேளம், பேண்டு வாத்தியத்துடன் அன்னை வெள்ளி சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்வோர் ஆயுள் விருத்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பால்குடம் எடுத்து அன்னைக்கு அபிஷேகம் செய்வோர், நீண்ட ஆயுளும், ஆராக்கியமும், செல்வமும், எல்லா நலன்களும் பெற்று நீடுழிவாழ்வார்கள்.

    • சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.
    • அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பால் காவடி, பறவை காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக தேர் தெற்கு வீதி, தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதே போல் சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உப்பனாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப் போல் ஆதமங்கலம் அய்யனார் கோவில், அரூர் மாரியம்மன் கோவில், தென்பாதி மகா மாரியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவில், ஓலையாம்புத்தூர் அய்யனார் கோவில், செம்பியன் வேளங்குடி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    ×