ஆன்மிகம்
கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தபோது எடுத்தபடம்.

கருட வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா

Published On 2018-03-19 06:09 GMT   |   Update On 2018-03-19 06:09 GMT
பாளையங்கோட்டை சக்தி நாராயண ஜோதிபதி தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழாவையொட்டி கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தது.
பாளையங்கோட்டை சக்தி நாராயண ஜோதிபதி தாங்கல் உள்ளது. இங்கு அய்யா வைகுண்டர் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கியது. அன்று இரவு 9 மணிக்கு உகப்பெருக்கும், பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. தினமும் காலையிலும், மாலையிலும் ஏடு வாசிப்பு நடந்தது.

கடந்த 16-ந்தேதி இரவு 7 மணிக்கு உகப்பெருக்கும், பணிவிடையும், இரவு 10 மணிக்கு திருகல்யாண ஏடு வாசிப்பும், இரவு 11 மணிக்கு அன்னவாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலாவும், அன்னதானமும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பும், திருவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு 8-30 மணிக்கு மேள தாளம் முழங்க கருட வாகனத்தில் அய்யா வைகுண்டர் வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் கும்மியடித்து அய்யாவை வழிபட்டனர். இரவு 10 மணிக்கு உகப்பெருக்கும், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News