ஆன்மிகம்

குழந்தை வடிவில் சயன பெருமாள்

Published On 2018-02-03 08:46 GMT   |   Update On 2018-02-03 08:46 GMT
திவ்ய தேசங்களில் 11-வது தலமாக இருக்கும் திருச்சிறு புலியூரில் மட்டும் தான் இறைவன், பள்ளிகொண்ட கோலங்களிலேயே குழந்தை வடிவத்தில் அருள்கிறார்.
பெருமாளுக்கு 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு தலங்கள் மட்டுமே தெற்கு நோக்கி அமைந்தவை. அவை ஸ்ரீரங்கம், திருச்சிறுபுலியூர். இரண்டுமே பள்ளிக்கொண்ட பெருமாள் தலங்களில் இதில் ஸ்ரீரங்கத்தில் பெரிய வடிவிலும், திருச்சிறுபுலியூரில் பாலகனாகவும் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

திவ்ய தேசங்களில் 11-வது தலமாக இருக்கும் திருச்சிறு புலியூரில் மட்டும் தான் இறைவன், பள்ளிகொண்ட கோலங்களிலேயே குழந்தை வடிவத்தில் அருள்கிறார். இரண்டாயிரம் வருடம் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில், பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் இருக்கின்றனர்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள், மனநல பாதிப்பு உள்ளவர்கள், தீராத நோய் இருப்பவர்கள் இந்த ஆலய இறைவனை வழிபாடு செய்யலாம். மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் சாலையில் கொல்லுமாங்குடி நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருச்சிறு புலியூரை அடையலாம்.
Tags:    

Similar News