ஆன்மிகம்
திருவண்ணாமலை மகாதீப கொப்பரை கீழே இறக்கப்பட்டது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மகாதீப கொப்பரை கீழே இறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் மகா தீபம் கடந்த 2-ந்தேதி ஏற்றப்பட்டது.
இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இன்று நேற்று காலை 6 மணி வரை மகா தீபம் காட்சி அளித்து நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து மகாதீப கொப்பரை நேற்று கீழே இறக்கப்பட்டது.
மலையில் இருந்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட கொப்பரைக்கு பூஜைகள் செய்யப்பட்டது.
மகா தீப மை ஆரூத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு வைத்த பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.