ஆன்மிகம்

காகத்துக்கு ஏன் உணவு வைக்க வேண்டும்?

Published On 2017-09-19 08:40 GMT   |   Update On 2017-09-19 08:40 GMT
தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம்.
தினமும் காலையில் சாப்பிடத் தொடங்கும் முன்பு, உங்கள் முன்னோரை நினைத்துக் கொள்ளுங்கள். ‘இந்த உணவு உங்களால் வந்தது’ என்று மனதுக்குள் நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுங்கள்.

நன்றி சொல்லி விட்டால் போதுமா? அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டாமா? அதற்கு உங்களுக்கு காகம் உதவுகிறது. தினமும் காலையில் காகத்துக்கு உணவு வையுங்கள். நீங்கள் வைக்கும் உணவை காகம் சாப்பிடும்போது உங்கள் கர்ம வினைகள் கரைவதாக ஐதீகம்.

தினமும் காகத்துக்கு உணவளிக்கும் பட்சத்தில் நாளடைவில் உங்கள் கர்ம வினைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.
Tags:    

Similar News