ஆன்மிகம்

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை

Published On 2017-06-17 04:59 GMT   |   Update On 2017-06-17 04:59 GMT
தஞ்சையில் 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் 83-ம் ஆண்டு கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 24 கருட சேவை விழா நடைபெற்றது. நேற்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நேற்று நடந்தது.

இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவக் கண்ணன், கீழ வீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகளில் வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
Tags:    

Similar News