ஆன்மிகம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் வைகாசி திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-05-25 05:10 GMT   |   Update On 2017-05-25 05:10 GMT
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதியில் வைகாசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமியின் தலைமை பதியில் ஆண்டு தோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி, வருகிற 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றத்தையொட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு முத்திரிப்பதமிடுதலும், நடைதிறப்பும், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இனிமம் வழங்குதலும், பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பணிவிடையும் தொடர்ந்து அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.



27-ந்தேதி காலை மற்றும் மாலை பணிவிடையும், இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருவதும், 28-ந்தேதி அய்யா வெள்ளை சாற்றி அன்னவாகனத்தில் பவனி வருவதும் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும், பணிவிடையும், பகலில் உச்சிப்படிப்பும், இரவு உகப்படிப்பும், இரவு வாகன பவனியும், அன்னதர்மமும் நடைபெறுகிறது.

2-ந்தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரைவாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அய்யா குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 5-ந்தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
Tags:    

Similar News