ஆன்மிகம்

எடப்பாடியில் அய்யனாரப்பன் கோவில் திருவிழா

Published On 2017-04-26 05:29 GMT   |   Update On 2017-04-26 05:29 GMT
எடப்பாடி பூலாம்பட்டி ரோட்டில் சின்னமுத்தூர் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் தெவத்திருவிழா நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை பாக்கலாம்.
எடப்பாடி பூலாம்பட்டி ரோட்டில் சின்னமுத்தூர் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் தெவத்திருவிழா நடைபெற்றது. அதையொட்டி கோவில் நிர்வாகிகள் தலைமையில் எடப்பாடியில் இருந்து பூஜைக்கூடைகள் எடுத்து கல்லபாளையம் கோவில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரவு ஊர்வலமாக அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அய்யனாரப்பன், புடவைக்காரியம்மனுக்கு பழங்கள் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முப்பூஜை செய்யப்பட்டது. பின்னர் ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News