ஆன்மிகம்

அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

Published On 2017-04-01 05:43 GMT   |   Update On 2017-04-01 05:43 GMT
அரியாங்குப்பம் அருகே உள்ள பெரிய இருசம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
அரியாங்குப்பம் அருகே உள்ள பெரிய இருசம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 10 மணியளவில் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், சிவன், பார்வதி ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (சனிக் கிழமை) இரவு ரணகளிப்பு நிகழ்ச்சியும், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலாவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மயானக்கொள்ளையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்க இருக்கிறது.

வருகிற 9-ந் தேதி இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

Similar News