ஆன்மிகம்

மேட்டூர் அருகே கந்தனூரில் சீனிவாச பெருமாள் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி

Published On 2017-02-15 06:11 GMT   |   Update On 2017-02-15 06:12 GMT
திருப்பதி-திருமலை கோவிலில் இருந்து சீனிவாச பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதரராக கொண்டு வரப்பட்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
மேட்டூர் அருகே உள்ள கந்தனூர் ஜெம்ஸ் பள்ளிக்கு திருப்பதி-திருமலை கோவிலில் இருந்து சீனிவாச பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதரராக கொண்டு வரப்பட்டு ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

அதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சியுடன் தொடங்கி பெருமாளுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. பஜனைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. மேட்டூர் பிரதர்ஸ் சஞ்சீவ்-முரளி ஆகியோர் பாடிய கன்னட பாடல்கள் அடங்கிய சி.டி.யை திருமலை-திருப்பதி தேவஸ்தான தனி அலுவலர் பி.ஆர்.ஆனந்த தீர்த்தாச்சார் பகடால் வெளியிட்டார்.

தொடர்ந்து ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள், பஜனை மண்டலிகள் இணைந்து பாடிய, தாச சாகித்யா நிகழ்ச்சியும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News