ஆன்மிகம்

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனம் குருபூஜை விழா

Published On 2017-02-15 05:44 GMT   |   Update On 2017-02-15 05:44 GMT
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சன்னதி தெருவில் தருமபுரம் 17-வது ஆதீனம் மாணிக்கவாசக தேசிக ஞானசம்பந்தர் அதிர்ஷ்டானத்தில்(சமாதி) குருபூஜை நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் சன்னதி தெருவில் தருமபுரம் 17-வது ஆதீனம் மாணிக்கவாசக தேசிக ஞானசம்பந்தர் அதிஷ்டானம்(சமாதி) உள்ளது. இந்த அதிர்ஷ்டானத்தில் குருபூஜை நடைபெற்றது.

இதையொட்டி தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்தர் சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தார். தொடர்ந்து ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கம்பகரேஸ்வரர் கோவில் காசாளர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News