ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இந்த மாதம் அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியின் போது, 5 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த மாதம் அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி சந்தனம், மஞ்சள், தேன், இளநீர், திருமஞ்சனப்பொடி, அரிசிமாவு, பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழுங்க வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழுங்க வழிபட்டனர்.