ஆன்மிகம்
அய்யம்பாளையத்தில் வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் கும்பாபிஷேகம்
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு வாழைத்தோட்டத்து அய்யன், விநாயகர், சுப்ரமணியர், மூல விநாயகர், அம்பல வாணர், நால்வர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் இந்து அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் இளம்பரிதி,துணை ஆணையர் மாரிமுத்து,உதவி ஆணையர் ஹர்சினி,கோவில் செயல் அலுவலர் செல்வம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இந்து அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் இளம்பரிதி,துணை ஆணையர் மாரிமுத்து,உதவி ஆணையர் ஹர்சினி,கோவில் செயல் அலுவலர் செல்வம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.