ஆன்மிகம்

கட்டைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2016-10-20 07:59 GMT   |   Update On 2016-10-20 07:59 GMT
தா.பேட்டை அருகே உடன் கட்டைக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் கிராமத்தில் உடன் கட்டைக்காரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் சிறப்புடன் முடிவுற்று புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதையடுத்து இந்த கோவிலின் மகாகும்பாபிகே விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கணபதி வழிபாடு, நவக்கிரஹ வேள்வி, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், அனுக்ஞை, கும்ப அலங்காரம், விக்னேஸ்வர பூஜை, நாடிசந்தானம், வேதிகாஅர்ச்சனை, மகா பூர்ணாஹீதி, யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

அப்போது உடன் கட்டை க்காரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News