ஆன்மிகம்
அலங்காநல்லூர் அருகே சந்தன கூடு திருவிழா
அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தன கூடு திருவிழா நடந்தது. சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் உள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் இணைக்கப்பட்டு கொடிமர விழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது.
இந்த விழாவில் அலங்காநல்லூர் அதன் சுற்று வட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சந்தனக்கூடு நிறைவடைந்தது. தர்காவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முன்னதாக சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் இணைக்கப்பட்டு கொடிமர விழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்தது.
இந்த விழாவில் அலங்காநல்லூர் அதன் சுற்று வட்டாரம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சந்தனக்கூடு நிறைவடைந்தது. தர்காவிற்கு வந்தவர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முன்னதாக சந்தனகூடு விழாவினை முன்னிட்டு பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.