ஆன்மிகம்

சுகப்பிரசவம் அருளும் நந்தி

Published On 2016-11-28 03:05 GMT   |   Update On 2016-11-28 03:05 GMT
சுகப்பிரசவம் நடக்க புதுச்சேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வில்லியனூர் காமீஸ்வரனர் கோயில் நந்தியை வழிபாடு செய்ய வேண்டும்.
விழுப்புரம்  புதுச்சேரி சாலையில், புதுச்சேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வில்லியனூர் காமீஸ்வரனர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன் சன்நதியை நோக்கி சுகப்பிரசவ நந்தி அமைந்துள்ளது.

பிரசவ காலத்தில், கருவுற்றுள்ள பெண்ணுக்கு வேண்டியவர்கள் யார் வேண்டுமானாலும், மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து, இந்தப் பிரசவ நந்தியை திருப்பி வைத்துவிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெண்ணுக்கு நிச்சயம் சுகப்பிரசவம் நடந்து விடுமாம். அதன்பிறகு குழந்தையும், தாயும் இந்தக் கோயிலுக்கு வந்து அபிஷேகம் செய்து அம்பாளை நோக்கி நந்தியை இயல்பு நிலைக்கு திருப்பி வைத்துவிட வேண்டும்.

Similar News