'தளபதி விஜய் குருதியகம்' ரசிகர்களின் புதிய முயற்சி
- சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக ‘தளபதி விஜய் குருதியகம்’ என்ற பெயரில் செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்தாகவும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்கள் என ஒரு மாவட்டத்தில் இருந்து 6 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டது.
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களும், ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் செயலியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த புதிய முயற்சி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.