கமல் முன் உண்மையை போட்டு உடைத்த உதயநிதி
- விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
- தமிழக வெளியீட்டு உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்ஃ பாசில், நரேன், சூர்யா என பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சென்னையில் நேற்று (18-06-2022) விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தமிழக வெளியீட்டு உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், "டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளை கூறினேன், அது போன்று இங்கும் சில உண்மைகளை கூறுகிறேன் கமல் சார். விக்ரம் படத்தை கமல் சார் முதலில் என்னிடம் தான் போட்டு காண்பித்தார். இடைவேளை வந்ததும் மிரண்டுவிட்டேன். அப்படி ஒரு இடைவேளை காட்சியை நான் பார்த்ததில்லை.
இந்த படத்தின் மூலம் தமிழ் விநியோகஸ்தரரான என் பங்கு மட்டும் ரூ.75 கோடி கிடைத்திருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இப்படி வசூல் செய்தது இல்லை. கமல் பட வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக ஏதோ ஒரு படத்தை எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷிற்கு நன்றி" என்று கூறினார்.