சினிமா செய்திகள்
null

குடும்பத்துடன் சுற்றுலா சென்ற இயக்குனர் ராஜமவுலி

Published On 2023-06-30 08:21 GMT   |   Update On 2023-06-30 08:23 GMT
  • ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
  • இதிடையே ராஜமவுலி குடும்பத்துடன் தூத்துக்கடிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

பாகுபலி மற்றும் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களை கவர்ந்து ஆஸ்கர் உள்ளிட்ட உலகின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

தொடர்ந்து ராஜமவுலி அடுத்து இயக்கும் படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமவுலி, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ராஜமவுலி இந்த படம் ஒரு உலகளாவிய அதிரடி சாகச படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.



இந்நிலையில் ராஜமவுலி தனது குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக வெளிநாடு சுற்றுலா செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் இயக்குனர் ராஜமவுலி தனது மனைவி ரமா, மகன் கார்த்திகேயா, மருமகள் பூஜா மற்றும் மகள் மயூகா ஆகியோருடன் தூத்துக்குடிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இங்கு ஒரு ரிசார்ட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.




அங்கு அவர்கள் தங்களின் வருகையை நினைவுபடுத்தும் விதமாக மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது மகன் கார்த்திகேயா, அற்புதமாக மிகவும் அடக்கமான நாள். இன்றைய நாளில் குடுமபத்தினருடன் மரக்கன்றுகளை நட்டேன். இந்த வாரத்தின் அற்புதமான ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News