சினிமா செய்திகள்
சமந்தா

நாக சைதன்யா புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா

Published On 2022-04-06 09:53 GMT   |   Update On 2022-04-06 09:53 GMT
நாக சைதன்யா - சமந்தா திருமண பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். 


சமந்தாவின் பதிவு

சமீபத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ’ஓ பேபி’ படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News