சினிமா
விஜய் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்த ரசிகர்கள்

Published On 2021-01-25 04:40 GMT   |   Update On 2021-01-25 04:40 GMT
நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
தமிழகத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க கடந்த நவம்பர் மாதமே அனுமதி அளிக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. 



இந்நிலையில், நெல்லையில் மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடி உள்ளனர். பொங்கல் விருந்தாக வெளிவந்து 10 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ஊரடங்கு பிரச்சனைக்கு மத்தியில் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்காகவும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News