சினிமா

சிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளார் - தேர்தல் அதிகாரி பேட்டி

Published On 2019-04-25 09:18 GMT   |   Update On 2019-04-25 09:18 GMT
நடிகர் சிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Srikanth
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவர் வாக்களித்துள்ளார். இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரும் விதிகளை மீறி வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் சாலிகிராமத்தில் காவேரி பள்ளிக்கூடத்தில் வாக்களித்தது தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதிலும் பூத் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.



இவர்களது ஓட்டுகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார் என்பதை கண்டுபிடித்து அந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Srikanth

Tags:    

Similar News