சினிமா
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த படத்தில் ரஜினி அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் படக்குழு தீவிரமாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் முருகதாசின் கத்தி, சர்கார் படங்களை போலவே அரசியல் படமாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.
ரஜினியும் அரசியலில் இறங்கியிருக்கும் நிலையில், இது அவரது அரசியலுக்கு ஏற்ற வகையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ரஜினி படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைப்பதற்கான ஆலோசனைகள் நடப்பதாக கூறப்படுகிறது. முருகதாஸ் படங்களின் பெயர்கள் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். நாற்காலி என்று தலைப்பு வைக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். படத்தில் ரஜினி முதல்வராக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Naarkali #Rajinikanth166 #ARMurugadoss