சினிமா

வந்தா ராஜாவாதான் வருவேன் என்று அடம் பிடிக்கும் சிம்பு

Published On 2018-11-06 10:05 GMT   |   Update On 2018-11-06 10:06 GMT
சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று சிம்பு அடம்பித்திருக்கிறார். #Simbu #STR #VanthaRajavaThaanVaruven
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் - சமந்தா - பிரணீதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் கேத்ரின் தெரசா, யோகிபாபு, மகத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்த படக்குழுவினர் தற்போது படத்திற்கு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. 



லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. #STR
Tags:    

Similar News