சினிமா

மீ டூ கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

Published On 2018-10-22 11:31 GMT   |   Update On 2018-10-22 11:31 GMT
உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மீடூ குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார். #MeToo #AishwaryaRai
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளைத் துணிந்து வெளியே சொல்வது மீ டூ இயக்கம் மூலம் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள், பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தி சினிமாவில் விகாஷ் பால், சுபாஷ் கபூர், அலோக்நாத், சஜித்கான், நானாபடேகர் உள்ளிட்டோர் புகார்களில் சிக்கி தங்கள் படவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அதற்காக நிதி வசூல் செய்யும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிளம்பும்போது மீ டூ விவகாரம் தொடர்பாக அவரிடம் தொடர்ச்சியாக பல கேள்விகள் கேட்கப்பட்டன.



அப்போது கேட்காதது போல் பதில் சொல்லாமல் கடந்துசென்றார். அவரது இந்தச் செய்கை இந்தி சினிமா வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஐஸ்வர்யா மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார்.
Tags:    

Similar News