சினிமா

பெண்கள் புனிதமானவர்கள் - விஜய் சேதுபதி

Published On 2018-09-30 11:16 GMT   |   Update On 2018-09-30 11:16 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு கொடுத்துள்ளார். #VijaySethupathi
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது,

‘‘சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் யாரையும் தடுக்க கூடாது’’ என்றார்.



விஜய்சேதுபதி கூறும் போது, ‘‘ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News