சினிமா

எங்கள் மீது நக்சலைட் முத்திரை குத்துவதா? -இயக்குனர் அமீர்

Published On 2018-06-12 11:05 GMT   |   Update On 2018-06-12 11:05 GMT
கோடிக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டு மக்களுக்காக போராடும் எங்கள் மீது ‘நக்சலைட்’ முத்திரை குத்துவதா என்று இயக்குனர் அமீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். #Ameer
தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் சார்பில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

‘இங்கு கலந்து கொள்பவர்களில் சீமானை தவிர மற்ற அனைவரும் திரைத்துறையில் இருக்கிறோம். சீமான் மட்டுமே மண்ணையும் மக்களையும் பற்றி மட்டும் பேசும் ஒரே தலைவர். நாங்கள் இங்கே வருவதன் நோக்கம் எங்களுக்கு அங்கீகாரம் தந்த மக்களுக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பொது பிரச்சினைக்கு வருவதால் இழப்பு எங்களுக்குதான்.

நான் வெற்றிமாறன் எல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இயக்குனர்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக பொதுவெளிக்கு வரும் போது எங்கள் மீது பொய்யான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

எங்கள் மீது நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்துகிறார்கள். எங்களை நக்சலைட்டுகள் என்று சொல்பவர்கள் தான் நக்சலைட்டுகள் என்று நம்புகிறோம். நீட்டுக்கு எதிராக முதலில் எதிர்க்குரல் கொடுத்தவர்கள் நாங்கள் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News