search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீர்"

    • இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
    • மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவந்தாலும்  சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் ரீரிலீஸ் திரைப்படங்களுக்கு மக்கள் அதிகம் செல்லத் தொடங்கினர். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதைத் தொடர்ந்து இன்று 4 படங்கள் திரைக்கு வந்துள்ளது.

     

    1.ஸ்டார்

    இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்து பின்னணியை வைத்துக் கொண்டு திரைத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என போராடும் இளைஞனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

    2. ரசவாதி

    மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசவாதி திரைப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    3. உயிர் தமிழுக்கு

    தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் அமீர், அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் மற்றும் முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்தார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஆதாம் பாவா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பொலிடிகல் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

     

    4. மாயவன் வேட்டை

    அறிமுக இயக்குனரான சிக்கல் ராஜேஷ் அவரே இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் மாயவன் வேட்டை. மூவிலயா பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிக்கல் ராஜேஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாயவன் வேட்டை ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்.
    • மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்வது நீங்க தான்.

    இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் "உயிர் தமிழுக்கு" திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு குறித்து காட்டமான கருத்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்து சமீபத்தில் கூட 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் சிக்கினர். அப்போ நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்,, இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா?"

    "வடமாநிலத்தில் எந்த பெண்ணும் தோடு, மூக்குத்தியை கழற்ற வைக்கப்படவில்லை. என் மாநிலத்தில் மட்டுமே தோடு, மூக்குத்தி என எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் தான் இ.வி.எம். இயந்திரத்தை எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றீர்கள்," என்று தெரிவித்தார். 

    • இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
    • இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.

    இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக் கில் தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை திரட்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இது தொடர்பாக இயக்குனர் அமீரை டெல்லிக்கு நேரில் அழைத்து 10½ மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது அமீரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பல்வேறு தகவல்களை திரட்டியுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இயக்குனர் அமீரின் வீடு மற்றும் அலுவலகம், ஜாபர் சாதிக்கின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ஜாபர்சாதிக் போதைப் பொருட்களை கடத்தி இருப்பதாக கூறப்படுவதால் இந்த பணம் எந்தெந்த வழிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது பற்றிய தகவல்களையே அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது திரட்டி வருகிறார்கள்.

    சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளதா? சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அது தொடர்பாகவே ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாபர் சாதிக் சிறையில் உள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த இயக்கு னர் அமீர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்துள்ளனர்.

    இந்த விசாரணைக்கு அமீர் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ அமீர் மீண்டும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதன் முடிவில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்தால் அவை முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    • போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை முடிந்து இயக்குனர் அமீர் சென்னை திரும்பியுள்ளார்
    • அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

    போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை முடிந்து இயக்குனர் அமீர் சென்னை திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், டெல்லியில் நடந்த விசாரணை தொடர்பான தகவல்களை கேட்பதற்காக தொடர்பு கொண்டனர். இதையடுத்து தனது செல்போன் ஸ்டேட்டஸ் மூலமாக அமீர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.
    • போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    டெல்லியில் இருந்து போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை ஏற்றுமதி செய்வதாக ஏமாற்றி ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி போதைப்பொருள் கடத்தலில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் ஜாபர் சாதிக் சுருட்டி இருப்பது பற்றி தெரிய வந்ததால் இதன் பின்னணி பற்றி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அவரோடு சேர்ந்து 'இறைவன் மிகப்பெரியவன்' என்கிற திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளராக ஜாபர் சாதிக்கும் இயக்குனராக அமீரும் இருந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓட்டல் ஒன்றையும் இருவரும் கூட்டாக தொடங்கி நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி அதிகாரிகளிடம் பிடிபட்டார். இதனால் இயக்குனர் அமீருக்கும், ஜாபர் சாதிக்குக்கும் எந்த மாதிரியான தொடர்புகள் இருந்தன? என்பது பற்றி இயக்குனர் அமீரிடம் டெல்லியில் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்காக சம்மன் அனுப்பி இயக்குனர் அமீரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேரில் வரவழைத்திருந்தனர். டெல்லியில் உள்ள போதைப்பொருள் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் அமீர் சென்று இருந்தார்.

    ஆனால் அதிகாரிகள் அவரை 11.30 மணி அளவிலேயே விசாரணைக்காக அழைத்தனர். இதன் பின்னர் அமீரிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 10.20 மணிக்கு அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

    இதன் மூலம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளனர்.

    ஜாபர் சாதிக்குடன் ஏற்பட்டிருந்த பழக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அமீர், சினிமா வட்டாரத்தில் மற்றவர்களுடன் பழகியது போலவே ஜாபர் சாதிக்குடன் பழகி வந்ததாகவும், போதைப்பொருள் கடத்தலில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது பற்றிய ஆலோசனையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இயக்குனர் அமீரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, அமீர் மீது கைது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அமீர் சென்னை திரும்பியுள்ளார்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ள அதிகாரிகள், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    • கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
    • ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    "செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

    உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

    நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

    மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் அமீர் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் இயக்குவது மட்டுமல்லாமல் பல படக்களில் நடித்தும் உள்ளார்.

    2002-ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதிபகவன்' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனர் அமீர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அறிவித்திருந்தார்.


    இந்நிலையில், இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

    "தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

    தெரிபு தெரிபு குத்தின ஏறு..

    கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

    புல்லாளே ஆய மகள்.."

    என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.


    மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

    "தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!" என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இறைவன் மிகப் பெரியவன்’.
    • இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    மவுனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன் போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் அமீர். இவர் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

    தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன் மிகப் பெரியவன்'. ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாஃபர் சாதிக் தயாரிக்கும் இந்த படத்துக்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசை இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.


    இறைவன் மிகப் பெரியவன் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், இந்த போஸ்டரில் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


    • ‘மௌனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘ஆதிபகவன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
    • கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னாடி 21 ஆண்டுகளை கடந்துள்ளது.

    2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதிபகவன்' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த மூன்று நாட்களுக்கு முன் 21 ஆண்டுகளை கடந்துள்ளது. சில திரைப்படங்களிலும் அமீர் நடித்துள்ளார்.

    இந்நிலையில் இயக்குனர் அமீர் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த இயக்குனர் அமீர், மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

    • அமீர் நடித்து வரும் திரைப்படம் ‘மாயவலை’.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார்.


    யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ராம் ஜி ஒளிப்பதிவு செய்ய எஸ்.பி.அஹமத் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 'மாயவலை' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை இயக்குனர் சமுத்திரகனி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    ×