சினிமா

துப்பாக்கிச்சூட்டில் பலியான ரசிகருக்கு தனுஷ் இரங்கல்

Published On 2018-05-24 13:35 GMT   |   Update On 2018-05-24 13:35 GMT
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான ரசிகர்கருக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Dhanush #Sterlite
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



உயிரிழந்தவர்களில் ரகு என்கிற காளியப்பன் நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தில் இருப்பவர். இவருடைய இறப்புக்கு நடிகர் தனுஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், ‘துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S. ரகு (எ) காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.
Tags:    

Similar News