சினிமா

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2018-04-27 01:57 GMT   |   Update On 2018-04-27 01:57 GMT
மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #IravukkuAayiramKangal
அருள்நிதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 



`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அந்த வகையில் ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பதை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #IravukkuAayiramKangal #Arulnidhi

Tags:    

Similar News