search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்யா பிரதீப்"

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’. 

    இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், கலை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.

    நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். 

    படம் மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat

    தடம் டிரைலர்:

    அருண் விஜய் நடிப்பில் தடம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தில் நாயகியின் உதட்டை கடிக்கவில்லை என்று அருண்விஜய் கூறியுள்ளார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep
    தடையற தாக்க, மீகாமன் படங்களை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தடம். அருண் விஜய் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் என நான்கு கதாநாயகிகள். 

    ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் தயாரித்துள்ளார். இந்த படம் பற்றி மகிழ்திருமேனி பேசும்போது ‘தடையற தாக்க என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    அந்த படத்துக்கு பின்னர் 2-வது முறையாக அருண்விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு இயக்குனரின் கதாநாயகன். அவர் கேரியரில் இந்த படமும் மறக்க முடியாத தடத்தை பதிக்கும். செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி என் மனதை பெரிதாக பாதித்து படமாக உருவாகி இருக்கிறது’ என்றார்.



    அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.

    நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep

    அருண் விஜய் பேசிய வீடியோ:

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப் - வித்யா பிரதீப் - ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் `தடம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Thadam #ArunVijay
    மணிரத்னம் இயக்கிய `செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் `தடம்', `சாஹோ', `அக்னிச் சிறகுகள்', `பாக்ஸர்' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

    இதில் `தடம்' படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே அருண் விஜய்யை வைத்து `தடையறத் தாக்க' படத்தை இயக்கியவர். இந்த படத்தில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

    ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அருண் ராஜ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Thadam #ArunVijay

    மு.முாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் விமர்சனம். #IravukkuAayiramKangal #Arulnidhi
    இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். 

    அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார். 

    பின்னர் நடந்தது பற்றி அருள்நிதி யோசிக்க, பிளாஸ்பேக் செல்கிறது. கால் டாக்சி டிரைவரான அருள்நிதியும், நர்ஸ் வேலை பார்க்கும்  மஹிமாவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒருநாள் இரவில் மஹமாவை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடமிருந்து மஹிமாவை, அஜ்மல் காப்பாற்றி அனுப்புகிறார்.



    பின்னர் மீண்டும் அஜ்மலை சந்திக்கும் மஹிமா, தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூற, அஜ்மல் அவளை அடைய நினைத்து, தவறாக பேசுகிறார். இதையடுத்து அஜ்மலை அடித்து விட்டு மஹிமா அங்கிருந்து சென்றுவிடுகிறாள். தொடர்ந்து அஜ்மல், மஹிமாவை தொந்தரவு செய்ய, அதனை தனது காதலரான அருள்நிதியிடம் மஹிமா கூறுகிறாள். அப்போது, கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சிக்கும் சாயா சிங்கை அருள்நிதி காப்பாற்றுகிறார். 

    சாயா சிங், அஜ்மல் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், வீடியோ ஒன்றை வைத்து மிரட்டுவதாகவும் கூற, அஜ்மலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் அருள்நிதி. இதையடுத்து அஜ்மல் வீட்டிற்கு செல்லும் அருள்நிதி, அங்கு சுஜா வருணி கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சயடைகிறார். பின்னர் போலீஸ் தன்னை கைது செய்ததும், தான் தப்பித்ததும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. 



    கடைசியில் சுஜா வருணியை கொலையை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீசிடம் இருந்த தப்பித்த அருள்நிதி கொலையாளியை கண்டுபிடித்தாரா? கொலைக்கு நடுவே சந்தேகப்படும் அந்த ஆயிரம் கண்கள் தான் படத்தின் மீதிக்கதை. 

    மஹமா நம்பியாருடன் காதல் காட்சிகளில் அருள்நிதி எதார்த்தமாக, அழகாக நடித்திருக்கிறார். அதேநேரத்தில் தனது காதலிக்கான பிரச்சனையை எதிர்கொள்ளும் போது, பரபரப்பான சூழலில் கோபம் கலந்த தேடலிலுடனும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மஹமா நம்பியார் திரையில் அழகு தேவதையாக வந்து கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

    அஜ்மல் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார். மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    இரவில் நடக்கும் ஒரு கொலை, அந்த கொலையில் சம்பந்தப்படாத ஒரு சாதாரண மனிதன் ஒருவன் சிக்குகிறான். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர, அதில் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். அதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அதேநேரத்தில் அதில் பல முடிச்சுகள் இருக்க, அதனை அவன் எப்படி எதிர் கொண்டான். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவனை கண்டுபிடித்தானா என்பதை த்ரில்லிங்கான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்தின் கதையில் விறுவிறுப்பு இருந்தாலும், திரைக்கதையின் வேகத்தில் தொடர்ந்து பல டுவிஸ்டுகள் வருவது ரசிகர்களுக்கு குழப்புத்தை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது. 

    சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் இரவை வெளிச்சம்போட்டு காட்டுப்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' கவனம் தேவை. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
    மு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முன்னோட்டம். #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal
    `ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'.

    மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - சாம்.சி.எஸ், கலை - என்.கே.ராகுல், ஸ்டன்ட் - கணேஷ் குமார், எடிட்டிங் - சான் லோகேஷ், தயாரிப்பு - டில்லி பாபு, எழுத்து, இயக்கம் - மு.மாறன்.

    ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. 



    படத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் நாயகன் அருள்நிதி கூறும்போது,

    கால்டாக்சி டிரைவர் ஒருவர் பிரச்சினையில் மாட்டுகிறார். அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் கதை. இதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்கும். பாடல்களும் யதார்த்தமாக இருக்கும். சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை. தலைப்புக்கு ஏற்ப இரவு நேரத்தில் அதிகமாக படமாக்கினோம்.

    இது நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களை சேர்த்து விறுவிறுப்பாக, மு.மாறன் இதை இயக்கி இருக்கிறார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை. ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜ்மல் பாத்திரம் பேசப்படும். அவருக்கும் எனக்கும் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதை மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்தோம். நாயகி மகிமா நம்பியார் நர்சாக வருகிறார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளன. 

    படம் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal

    ×