சினிமா

கத்ரீனா கைப் அம்மா திண்டுக்கல் ஆசிரியை

Published On 2018-03-21 10:22 GMT   |   Update On 2018-03-21 10:22 GMT
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். இவரது தாய் திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவரைப் பற்றிய காதல் ‘கிசு கிசு’கள் ஏராளம். ரன்பீர் கபூரை காதலிப்பதாக கூறப்பட்டது. இப்போது, சல்மான்கானை மீண்டும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கத்ரீனாகைப் இந்தி பட உலகில் பிரபலமாக இருந்தாலும், கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவருடைய அம்மா திண்டுக்கல் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவருடைய பெயர் சுசானே.

இவர் திண்டுக்கல் அருகே உள்ள மவுண்டன் வியூ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இது அறக்கட்டளை சார்பாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் பள்ளி. இங்கு பணிபுரியும் தனது அம்மாவை பார்ப்பதற்காக கத்ரீனா கைப் விரைவில் திண்டுக்கல் வர இருக்கிறார். 



அப்போது தனது அம்மா பாடம் கற்பிக்கும் அந்த பள்ளி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கத்ரீனா கைப் இங்கு வரும் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News