சினிமா
காலா பட வெளியீட்டுக்கு எதிராக சதி - எஸ்.தாணு பேட்டி
ரஜினிகாந்த் நடித்த காலா பட வெளியீட்டுக்கு எதிராக சதி நடப்பதாக பட அதிபர் எஸ்.தாணு புகார் கூறியுள்ளார். #Kaala
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவரும், ‘கபாலி’ உள்பட பல படங்களை தயாரித்தவருமான எஸ்.தாணு, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“செல்வகுமார் என்ற வினியோகஸ்தர், ‘கபாலி’ படத்தை வாங்கி வெளியிட்ட வகையில், நஷ்டம் அடைந்ததாகவும், அதற்காக தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ‘கபாலி’ படத்தை வாங்கியவர், செல்வகுமார் அல்ல. பெங்களூரை சேர்ந்த வேணுகோபால் தான் அந்த படத்தை வாங்கினார். இவரை என்னிடம் அழைத்து வந்தவர், செல்வகுமார்.
ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் வெளியீட்டுக்கு எதிராக சதி நடக்கிறது. ரஜினிகாந்தை நோக்கி அம்புகள் பாய்கின்றன. அவரிடம் இருந்து பணம் வாங்க முயற்சி நடக்கிறது.”
இவ்வாறு பட அதிபர் எஸ்.தாணு கூறினார். #Kaala
“செல்வகுமார் என்ற வினியோகஸ்தர், ‘கபாலி’ படத்தை வாங்கி வெளியிட்ட வகையில், நஷ்டம் அடைந்ததாகவும், அதற்காக தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ‘கபாலி’ படத்தை வாங்கியவர், செல்வகுமார் அல்ல. பெங்களூரை சேர்ந்த வேணுகோபால் தான் அந்த படத்தை வாங்கினார். இவரை என்னிடம் அழைத்து வந்தவர், செல்வகுமார்.
ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் வெளியீட்டுக்கு எதிராக சதி நடக்கிறது. ரஜினிகாந்தை நோக்கி அம்புகள் பாய்கின்றன. அவரிடம் இருந்து பணம் வாங்க முயற்சி நடக்கிறது.”
இவ்வாறு பட அதிபர் எஸ்.தாணு கூறினார். #Kaala