சினிமா

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு இன்று துவக்கம் - ஜூலையில் ரிலீஸ்

Published On 2018-02-12 08:00 GMT   |   Update On 2018-02-12 08:00 GMT
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் `செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கும் நிலையில், படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
`காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படத்திற்கு `செக்க சிவந்த வானம்’ என்று தலபை்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் சமீபத்தில் வெளியானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கும் நிலையில், இரண்டு மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. பின்னர் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் முடிந்து வருகிற ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குடும்ப படமாக உருவாக இருக்கும் இந்த படம் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என இந்த 4 சகோதரர்களுக்கு இடையே நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக அருண் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பகத் பாஷில் ஒப்பந்தமாகி இருந்தார். தேதி மற்றும் சம்பள பிரச்சனையால் அவருக்கு பதில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமானதாக கூறப்படுகிறது. 



மேலும் இந்த படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

இந்த படத்தை மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. தெலுங்கில் `நவாப்' என்ற பெயரில் இந்த படம் வெளியாகிறது. 
Tags:    

Similar News