சினிமா
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் புதிய படம், இன்னும் பத்து நாட்களில் நிறைவடைய இருக்கிறதாம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `த்ரிஷா இல்லனா நயன்தாரா'.
அந்த படத்தைத் தொடர்ந்து ஆதிக், சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் விமர்சனங்களுக்கிடையே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், ஆதிக் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் இயக்கி வருகிறார்.
காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருக்கிறதாம்.
சத்தமே இல்லாமல் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.