சினிமா

நடிகர் விஷால், ரசிகர்களுடன் ஆலோசனை

Published On 2017-12-04 02:43 GMT   |   Update On 2017-12-04 02:43 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் விஷால் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. இதை முன்னிட்டு திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஜெயசீலன் என்பவரது வீட்டில் அவர் ரசிகர்களை சந்தித்தார்.

அப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக தேர்தல் பிரசாரம், வேட்பு மனுதாக்கல் செய்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 1 மணி நேரம் அவர் கலந்துரையாடினார். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டு விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நடிகர் விஷால் வந்திருப்பது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News