சினிமா
அனுஷ்காவின் புகைப்படம் ஏற்படுத்திய பரபரப்பு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா எடையை அதிகரித்து குண்டு ஆனார். பின்னர் உடற்பயிற்சி, யோகா, உணவு குறைப்பு என்று பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலன் இல்லை.
தற்போது பயிற்சியாளரை வரவழைத்து உடற் பயிற்சிகள் செய்தார். பல மாதங்கள் நடத்திய உடற்பயிற்சி காரணமாக அனுஷ்கா உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவர் பேன்ட்-பனியன் அணிந்து ஒல்லியாக காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது அனுஷ்கா தானா? என்று சொல்லும் விதத்தில் உள்ள அந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் `பாக்மதி' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது பயிற்சியாளரை வரவழைத்து உடற் பயிற்சிகள் செய்தார். பல மாதங்கள் நடத்திய உடற்பயிற்சி காரணமாக அனுஷ்கா உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். அவர் பேன்ட்-பனியன் அணிந்து ஒல்லியாக காட்சி அளிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இது அனுஷ்கா தானா? என்று சொல்லும் விதத்தில் உள்ள அந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனுஷ்கா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் `பாக்மதி' படம் வருகிற ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.